தடுப்பணை தேவை

Update: 2024-06-23 18:15 GMT
திட்டக்குடி அருகே வெண்கரும்பூர் கிராமத்தின் வழியாக ஆறு செல்கிறது. விவசாய பயன்பாடு மற்றும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க இந்த ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் இந்த பகுதியில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்