பொதுமக்கள் அச்சம்

Update: 2024-06-23 14:31 GMT

மதுரை திருப்பாலை கிருஷ்ணா நகர் மெயினில் பஸ் நிறுத்தம் பகுதியில் வெறி நாய் ஒன்று சுற்றித்திரிகிறது. இது அங்கு வரும் பயணிகளையும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் துரத்தி சென்று கடித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் செல்வோர் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, வெறி நாயை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்