சுற்றுலா பயணிகள் அச்சம்

Update: 2024-06-23 08:37 GMT

கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமம் பகுதியில் கால்களை நனைப்பதற்கு அமைக்கப்படுள்ள படித்துறையை பயன்படுத்துவது வழக்கம். தற்போது படித்துறையில் பாசி படிந்து காணப்படுவதால் அங்கு கால்களை நனைக்க வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் நலன்கருதி படித்துறையில் படிந்துள்ள பாசிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்