மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2024-06-09 11:43 GMT

திருச்சி திருவானைக்கோவில் 4-ம் பிரகார வீதியான தெற்கு உள்வீதியும், கீழ உள்வீதியும் இணையும் கீழ உள்வீதியின் மேல்புறம் சாலையோரம் மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் நன்கு வளர்ந்தும் அடர்ந்தும் காணப்படுவதால் இரவு நேரங்களில் தெருவிளக்கின் வெளிச்சம் தெரியாத அளவிற்கு இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இந்த வீதிகளை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே மரக்கிளைகளை அப்புறப்படுத்தி நன்கு வெளிச்சம் தெரியும்படி செய்வதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்