சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்

Update: 2024-06-02 16:46 GMT
விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த கட்டிடம் மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்