செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, ம.பொ.சி.நகர், வி.என்.சாமி தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் காலை மற்றும் இரவு நேரங்களில் பணி முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்துகிறது. மேலும் இரவு நேரங்களில் நாய்கள் கூட்டமாக சேர்ந்து குலைத்துக் கொண்டே இருப்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தெரு நாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.