கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

Update: 2024-05-19 12:36 GMT

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியங்குறிச்சி கிராமத்தில் சின்னேரி என்ற ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கரை வழியாக தினமும் பொதுமக்கள் அவரவர்களின் விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஏரிக்கரை முழுவதும் அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல காட்சியளிக்கிறது. இதனால் அதனுள் விஷ பூச்சிகள், கதண்டுகள், பாம்புகள் குடியிருந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்