நாய்கள் தொல்லை

Update: 2024-05-12 16:31 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அசோக் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் சாலைகளில் சுற்றி திரிவதால் வாகனங்கள் மீது மோதுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். தெருவில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?

மேலும் செய்திகள்