சீரமைக்க வேண்டும்

Update: 2024-04-28 09:05 GMT

பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியில் மீன் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் மீன் வாங்குவதற்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்கள் வசதிக்காக சந்தையில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கழிவறை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த கழிவறையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்