நாய்கள் தொல்லை

Update: 2024-04-21 11:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை  பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்