உயர் கோபுர மின்விளக்கு தேவை

Update: 2024-04-14 17:33 GMT
திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இரவு நேரத்தில் அங்கு வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்