குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2024-04-14 08:54 GMT

சுசீந்திரம் அருகே இரவிபுதூர் கிராமத்தில் காடான்குளம் உள்ளது. இந்த குளம் இரவிபுதூர் கிராமத்தில் இருந்து மைலாடி வரை நீண்டு காணப்படுகிறது. இந்த குளத்தை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காகவும், விவசாயத்துக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த குளம் பாசிகள் படர்ந்து தண்ணீர் மாசடைந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் குளத்தில் குளிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தில் படர்ந்துள்ள செடிகள், பாசிகளை அகற்றி குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்