அம்மா பூங்கா திறக்க வேண்டியது அவசியம்

Update: 2024-04-07 18:22 GMT
ராமநத்தம் பஸ் நிறுத்தம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அம்மா பூங்காவை திறக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கின்றன. பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட பூங்காவில் சிறுவர், சிறுமிகள் விளையாட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து பூங்காவை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்