படித்துறையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-04-07 08:02 GMT

கொட்டாரம் பெருமாள்புரத்தில் பகவதி விநாயகர் பிள்ளையார் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றுவட்டார கிராம மக்கள் குளிப்பதற்கு உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தில் 2 படித்துறைகளும் உள்ளன. இந்த 2 படித்துறைகளும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால், கிராம மக்கள் குளத்தில் குளிப்பதற்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்த 2 படித்துறைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்