சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2024-03-31 17:16 GMT
விக்கிரவாண்டி அருகே குத்தாம்பூண்டி முருகன் கோவில் அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த பயணிகள் நிழற்குடை பலத்த சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் பயணிகள் நிழற்குடை முன்பு முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்து நிற்பதால், நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்