நடவடிக்கை தேவை

Update: 2024-03-24 07:50 GMT

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு சன்னதி தெரு உள்ளது. இந்த தெருவில் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது. ஆனால் சாலையோரத்தில் உள்ள கடைகளில் முன்பு ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால், பக்தர்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்வதற்கு பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பக்தர்கள் இடையூறு இன்றி கோவிலுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்