தெருநாய்கள் தொல்லை

Update: 2024-03-17 15:49 GMT

கரூர் நகர பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இவை இப்பகுதியில் கூட்டம், கூட்டமாக நின்று கொண்டு இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை கடிக்க பாய்கிறது. இதனால் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர். மேலும் இப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்