குளம் தூர்வாரப்படுமா?

Update: 2024-03-10 16:56 GMT
விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் 2 குளங்களும், அன்னியூர் கிராமத்தில் ஒரு குளமும் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த குளங்கள் தூர்ந்துபோனதோடு, அதிக அளவில் முட்செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் குளங்களில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே குளங்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்