குரங்குகள் தொல்லை

Update: 2024-03-10 16:55 GMT
விக்கிரவாண்டி தாலுகா வி.சாலை கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுகின்றன. மேலும் சாலையில் செல்லும் முதியோர்கள், குழந்தைகளை விரட்டி விரட்டி கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் கொண்டு சென்று விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்