நாய்கள் தொல்லை

Update: 2024-03-10 12:20 GMT

கோவை காரமடை கெம்பேகவுடர் காலனியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனால் அவர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை அடிக்கடி நிலவுகிறது. இதேபோல் 2 சக்கர வாகனங்களில் வருவோரையும் விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை நிலகிறது. அடிக்கடி வாகன விபத்துக்கு வழிவகுக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்