காணாமல் போன வாய்க்கால்

Update: 2024-02-25 18:14 GMT
பெண்ணாடம் அருகே செம்பேரி செல்லும் சாலையில் உள்ள வெலிங்டன் கிளை வாய்க்கால் தூர்ந்துபோய் காணப்படுகிறது. மேலும் வாய்க்கால் இருப்பது தெரியாத அளவுக்கு அங்கு அதிக அளவில் செடி, கொடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் வாய்க்கால் வழியாக தண்ணீர் சீராக செல்ல முடியாமல் வீணாக வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்