கருவேலை மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2024-02-25 11:23 GMT
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்தில் மு.புத்தூர், முனியங்குறிச்சி கிராமங்கள் உள்ளன. இதில் மு.புத்தூர் கிராமத்தில் இருந்து முனியங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரை சாலையின் இருபுறமும் போக்கு வரத்திற்க்கு இடையூறாக அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையினை ஆக்கிரமித்துள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்ந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்