செல்போன் வழிபறி

Update: 2024-02-18 11:08 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வெண்ணெய்மலை, நாவல்நகர், வாங்கப்பாளையம், வெங்கமேடு ஆகிய பகுதிகளில் செல் போன் வழிப்பறி திருட்டு அடிக்கடி நடந்து வருகிறது. பெண்கள், ஆண்கள் தனியாக நடந்துக்கொண்டு செல்போனில் பேசுபவர்களிடம் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வருபவர்களில், பின்னால் இருப்பவன் செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விடுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்