புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2024-02-11 17:41 GMT
விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாரியம்மன் கோவில் அருகில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் குப்பைகளும் குவிந்து கிடந்ததால் விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இது குறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து பாலத்தில் கிடந்த குப்பைகளை அகற்றியதோடு, செடிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றி சரிசெய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்