மாசுபடும் குளத்து நீர்

Update: 2024-02-11 15:24 GMT

அரியலூர் மாவட்டம் தத்தனூர் நடுவெளி பகுதியில் குளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குளத்தின் ஓரம் பொதுமக்கள் சிலர் மாட்டு சாணங்களை கொட்டி வருகின்றனர். இதனால் மழை பெய்யும் போது, சாணங்கள் கரைந்து குளத்து நீரில் கலந்து தண்ணீர் மாசு அடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த குளத்து நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்