காலணிகளை பாதுகாக்க இடவசதி

Update: 2024-02-04 17:52 GMT

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாசல் முன்பு காலணிகளை விட்டு செல்கின்றனர். இதனால் கோவில் வாசலில் காலணிகளாக காட்சி அளிக்கிறது. சாமி தரிசனம் முடிந்து திரும்பி வரும் வயதானவர்கள் காலணிகளை அணிந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் சிலர் காலணிகளை திருடி செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே கோவிலில் காலணிகளை பாதுகாப்பாக விட்டு செல்ல இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-சங்கரலிங்கம், சேலம்.

மேலும் செய்திகள்