சேதமடைந்த நிழற்குடை

Update: 2024-01-14 07:43 GMT

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், பஸ்சிற்காக அங்கு வரும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் நலன்கருதி சேதமடைந்த நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்