நோயாளிகள் கடும் அவதி

Update: 2024-01-07 15:27 GMT

திருச்சி தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் வெவ்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தகுந்த டாக்டரை பார்ப்பதற்காக ஆங்காங்கே தனித்தனி அறைகளில் இருப்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்த டாக்டர்கள் இருக்கும் அறைகளின் எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே மாற்றி, மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதினால் நோயாளிகள் அந்த எண் கொண்ட அறை எங்கு உள்ளது என தெரியாமல் அலைமோதுகின்றனர். இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நோயாளிகளின் சிரமத்தை போக்கும் வகையில் டாக்டர்கள் இருக்கும் அறை எண்களை தொடர்ச்சியாக அமைப்பதுடன், சம்பந்தப்பட்ட அறையின் எண்களை பெரிய அளவில் எழுதி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்