நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-12-10 11:38 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அளுந்தூரில் நீர்ப்பாசன குளமான பெரிய பாப்பான்குளம் உள்ளது. இந்த குளத்தின் நீர் பிடிப்பு பகுதியான கிழக்கு பகுதியில சுமார் ஒரு ஏக்கர் அளவிற்கு குளத்தை ஒட்டிய பகுதியில் பிளாட் போட்டு இடம் விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. அதனால் அளுந்தூர் பெரிய பாப்பான்குளத்தின் நீர்ப்பாசன விவசாயிகள் பாதிப்படுவார்கள். எனவே வருவாய் துறை அலுவலர்கள் பெரிய பாப்பான் குளத்தின் ஆக்கிரம்பை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்