பூங்காவில் நடக்கும் தகாத செயல்கள்

Update: 2023-12-03 12:09 GMT

திருச்சி பாரதியார் சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே ரெயில்வே பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து பொழுதை கழித்து செல்கின்றனர். இந்த பூங்காவிற்கு காதலர்கள் என்ற பெயரில் வரும் சிலர் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்லாமல் இந்த பூங்காவில் வந்து அமர்ந்து கொண்டு பெரியவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு நடந்து கொள்கின்றனர். சிறுவர், சிறுமிகள் இதனை பார்த்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் இந்த பூங்காவிற்கு குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்த்து விட்டனர். இதனை தடுக்கும் வகையில், போலீசார் இந்த பூங்காவில் மாற்று சீருடையில் ரோந்து வந்து இதனை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்