புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-11-26 10:33 GMT

கோத்தகிரியில் கடைவீதி, டோபிகானா, காம்பாய் கடை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இந்த புதர் செடிகளில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் பதுங்கி உள்ளன. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் உள்ளது. அவை சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருவதால், பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்