தெருநாய்கள் தொல்லை

Update: 2023-11-19 14:23 GMT

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் ராமானுஜர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் இந்த தெரு நாய்கள் இப்பகுதியில் செல்லும் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவற்றை கடிக்க துரத்துகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்