வடிகால் வசதி அமைக்கப்படுமா?

Update: 2023-11-05 17:33 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் இடது புறத்தில் உள்ள அணுகு சாலையின் ஓரத்தில் முறையான வடிகால் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் மழை பெய்யும் போது மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை பழுதடைவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்