கட்டுமான பொருட்கள்

Update: 2023-11-05 11:01 GMT

கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகே அரசு ஊழியர் குடியிருப்புகள் கட்டும் பணி பொதுப்பணித்துறையால் நடைபெற்று வருகிறது. அதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் பள்ளிக்கு செல்லும் சாலையில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சிரமத்துடன் நடந்து சென்று வர வேண்டி உள்ளது. எனவே கட்டுமான பொருட்களை ஓரமாக கொட்டி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்