மேற்கூரை இல்லாத நடைமேடைகள்

Update: 2023-10-29 11:42 GMT

திருச்சி மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற வைணவ திருத்தலமான பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு ரெயில் மார்க்கமாக வருகை தருகிறார்கள். இந்த நிலையில் இந்த ரெயில் நிலையத்தில் 2 நடைமேடைகளில் மேற்கூரை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்