கரடி அட்டகாசம்

Update: 2023-10-29 10:13 GMT

கோத்தகிரி கடைவீதி பகுதியில் போலீஸ் நிலையம், பள்ளிவாசல், மாரியம்மன் கோவில், அரசு ஆஸ்பத்திரி ஆகியவை அமைந்துள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. இந்த கரடி சில நேரங்களில் அந்த வழியாக செல்பவர்களை துரத்துகிறது. மேலும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. அதோடு பொதுமக்களை தாக்கும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்