தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-15 10:15 GMT

கோவை டாடாபாத் அழகப்ப செட்டியார் வீதியில் தினமும் காலையில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சில நேரங்களில் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் வருவோரையும் துரத்துகின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபயாம் நிலவுகிறது. எனவே அந்த பகுதியில் தெருநாய்கள் தொல்ைலயை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்