தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-08 14:13 GMT

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலைகளில் அங்கும், இங்குமாக சுற்றித்திரிகின்றன. அதுவும் இரவு நேரங்களில் அவற்றின் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை துரத்தி சென்று கடித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்