நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-10-01 17:14 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர் திருக்கை போன்ற பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். இதன் காரணமாக பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் புதிதாக நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்