தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-01 10:28 GMT

கோவை காந்திபுரம் டாடாபாத் 4-வது வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதோடு ஆங்காங்கே படுத்து கொள்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் நடந்து செல்பவர்களையும் அவை துரத்தி சென்று கடித்து வருகின்றன. எனவே அந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்