சிதம்பரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், வயதானவர்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால், அவர்கள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அட்டகாசம் செய்யும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.