தேங்கி கிடக்கும் நீரில் கொசு உற்பத்தி

Update: 2023-05-10 13:12 GMT

குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி 10-வது வார்டு டோபி காலனி பகுதியில் சாலையில் பல நாட்களாக மழைநீருடன் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பல முறை ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், சீவூர். 

மேலும் செய்திகள்