பயணிகளை அச்சுறுத்தும் நாய்கள்

Update: 2022-09-20 10:31 GMT



வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு பயணிகள் அமரும் பகுதிகளில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்