சேதமடைந்த பள்ளிக்கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-26 11:28 GMT

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் சித்தாம்பூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கட்டிடம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பி வைப்பதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்