கோத்தகிரி அரசு மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவை சுற்றிலும் ஏராளமான புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வனவிலங்குகளின் இருப்பிடமாக மாறி இருக்கிறது. இதன் காரணமாக நோயாளிகள் அச்சத்துடன் மருத்துவமனைக்கு சென்று வர வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே அங்குள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.