அரசு மருத்துவமனை கட்டிடத்தில் வளரும் அரசமரம்

Update: 2022-08-14 14:51 GMT

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு பன்மாடிகட்டிடத்தில், மூன்றாவது தளத்தில் அரச மரக்கன்று வளர்ந்துள்ளது. இந்தஅரச மரக்கன்று கடந்த 2 ஆண்டுகளாக பெரிய செடியாக வளர்ந்துள்ளது. இதனால் அந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. பச்சிளம் குழந்தைகள் வார்டில் கட்டிடம் பாதிப்பிற்குள் ஆவதற்கு முன்பாக அரச மரத்தை அகற்ற மருத்துவமனை இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்