பரங்கிப்பேட்டையில் பல பகுதிகளில் பெயர் பலகை இல்லை. புதிதாக இவ்வழியே வருவோர், செல்லவேண்டிய வழி தெரியாமல், பல கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு செல்கின்றனர். இதனால், எரிபொருள் செலவு அதிகமாவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் பெயர் பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.