மண் சரிவால் விபத்து அபாயம்

Update: 2022-08-11 12:00 GMT

விழுப்புரம் அருகே ஆழங்கால் பகுதியில் உள்ள சாலை வளைவில் மண் சரிந்துள்ளது. பல நாட்கள் ஆகியும் இதனை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே விபத்து தடுப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்