சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2022-08-11 11:58 GMT
விழுப்புரம்- செஞ்சி சாலையில் பாப்பான்குளம் பகுதியில் சாலையோரமாக கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. அதனை நகராட்சி நிர்வாகத்தினர் உடனுக்குடன் அப்புறப்படுத்தாததால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இங்கு கொட்டப்படும் கழிவுகளால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பலவித நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்