சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-10 14:16 GMT
கரூர் மாவட்டம், திருக்காடுதுறையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி பெண்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதை அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகத்தின் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதனால் அந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் திறந்து வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்